சதாமை வெல்வது கடினம்: ப்ளேர் திடீர் பல்டி
வாஷிங்டன்:
சதாமை கவிழ்ப்பது அவ்வளவு ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை என்று பிரிட்டிஷ் பிரதமர்டோனி பிளேர் கூறியுள்ளார்.
நேற்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுடன் கூட்டாகப் பேட்டி அளித்த பின்னர் பிபிசி வானொலிக்குஅவர் அளித்த பேட்டியில்,
20 ஆண்டுகளாக ஈராக்கில் சதாம் ஆட்சியில் உள்ளார். மக்கள் எதிர்த் தாக்குதல் நடத்தத்தொடங்கியிருப்பதைப் பார்க்கும்போது சதாமை வெல்வது மிகவும் கடினம் என்றே தோன்றுகிறதுஎன்றார்.
ஷியா முஸ்லீம்களை திரட்டும் அமெரிக்கா:
இதற்கிடையே ஈராக் தலைநகரான பாக்தாத்தில் வாழும் ஷியா முஸ்லீம் பிரிவினரைத் திரட்டியேசதாம் ஹூசேன் அரசைக் கவிழ்க்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
ஒட்டுமொத்த ஈராக்கை எடுத்துக் கொண்டால் கூட 60 முல் 65 சதவீத மக்கள் ஷியா பிரிவைச்சேர்ந்தவர்கள்தான் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இதுவரை அவர்களால் ஆட்சியைப் பிடிக்கமுடியவில்லை.
ஷியா பிரிவைத் தவிர வடக்கு ஈராக்கில் குர்திஸ் இன மக்களும் சதாமின் விரோதிகள்தான்.அவர்களுக்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ. போர்ப் பயிற்சிகளை அளித்துள்ளது.
எனவே ஷியா பிரிவு முஸ்லீம்கள் மற்றும் குர்திஸ் இன மக்களைத் திரட்டி சதாமின் அரசைக் கவிழ்க்கஅமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே தெற்கில் உள்ள பாஸ்ரா நகரில் அமெரிக்கப்படையினருக்கு ஷியா பிரிவு முஸ்லீம்கள்தான் உதவிக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையே வடக்கில் உள்ள கிர்குக் நகரை குர்திஸ் படையினர் கைப்பற்றவில்லை என்று ஈராக்அரசு மறுத்துள்ளது. அது தங்கள் வசம்தான் உள்ளது என்று அந்நாட்டு செய்தி அமைச்சரான முகமதுசயீத் கூறினார்.
இந்நிலையில் இந்த 9 நாள் போரில் ஈராக் இதுவரை தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் எதையும்பயன்படுத்தவில்லை என்று ஐ.நா. ஆயுதக் கண்காணிப்புக் குழுவின் தலைவரான ஹான்ஸ் பிளிக்ஸ்கூறியுள்ளார்.
-->