ஈராக்கில் இதுவரை 90,000 அமெரிக்க வீரர்கள் குவிப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

கடந்த வாரம் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 90,000 வீரர்களை ஈராக்கினுள்இறக்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இவர்களைத் தவிர மேலும் 1,20,000 வீரர்கள் ஈராக்கினுள் நுழையத் தயார் நிலையில் உள்ளனர்என்று பென்டகன் கூறுகிறது.

டெக்ஸாஸில் இருந்து 4ஆம் இன்பான்ட்ரி பிரிவைச் சேர்ந்த படைகள் ஈராக் நோக்கிக் கிளம்பஆரம்பித்துள்ளன.

இறந்தோர் பட்டியல்:

இதற்கிடையே இதுவரை போரில் இறந்தவர்கள், சிறை பிடிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல்போனவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை 26 அமெரிக்க வீரர்களும், 22 பிரிட்டிஷ் வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால்கொல்லப்பட்ட ஈராக் வீரர்களின் எண்ணிக்கை குறித்து சரியாகத் தெரியவில்லை. இரண்டுநாட்களுக்கு முன்பே 700க்கும் மேற்பட்ட ஈராக் வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள்வெளியாகின.

இவர்களைத் தவிர அமெரிக்கத் தாக்குதல்களில் சுமார் 350 ஈராக் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 4,000 பேர் காயமடைந்துள்ளனர்.

3,500க்கும் மேற்பட்ட ஈராக் வீரர்களை போர்க் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளதாக அமெரிக்காகூறுகிறது. அதேபோல் 7 அமெரிக்க போர்க் கைதிகள் தங்களிடம் உள்ளதாக ஈராக் அதிகாரிகள்கூறுகின்றனர்.

இவர்களைத் தவிர தங்களுடைய 8 வீரர்களைக் காணவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+