வரிகளை எதிர்த்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் ஊர்வலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் சாலை வரி உயர்வுமற்றும் பசுமை வரியைக் கண்டித்து பேரணி மற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழக சுற்றுலா வாகன உரிமையாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த பல்வேறு சங்கங்களைச்சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். மேக்ஸி கேப், டாக்சிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பலதரப்பட்டவர்கள் இதில் பங்கேற்றனர்.
சென்னை ஜிம்கானா கிளப் அருகில் உள்ள காமராஜர் சிலையிலிருந்து ஊர்வலம் கிளம்பி,சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் இல்லம் எதிரே முடிவடைந்தது. அங்கு கண்டன ஆர்ப்பாட்டம்நடந்தது.
பேரணியில் கூட்டமைப்பின் தலைவர் எர்னஸ்ட் பால், சென்னை மாநகர மேக்ஸி கேப் வாகனஉரிமையாளர்கள் சங்கத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-->












Click it and Unblock the Notifications