அமெரிக்காவுக்கு எதிர்ப்பு: ஐ.நா. தலைமை ஆயுத கண்காணிப்பாளர் ராஜினாமா
ஐ.நா. சபை:
தனது பரிந்துரையையும் மீறி ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து ஐ.நா. சபையின் தலைமைஆயுதக் கண்காணிப்பாளர் ஹேன்ஸ் பிலிக்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இவரது தலைமையில் நூற்றுக்கணக்கான ஆயுதப் பார்வையாளர்கள் கடந்த 6 மாதமாக ஈராக்கிடம் பேரழிவுஆயுதங்ளான அணு, ரசாயன, உயிரியல் ஆயுதங்கள் இருக்கின்றனவா என ஆய்வு நடத்தினர்.
ஆனால், ஈராக்கிடம் பேரழிவு ஆயுதம் ஏதும் இல்லை என்று இந்த ஆய்வுகளில் தெரியவந்தது. இதையடுத்துஈராக்கை தாக்க வேண்டிய அவசியம் இல்லை என ஹேன்ஸ் பிலிக்ஸ் கூறியிருந்தார். மேலும் எங்களுக்குசோதனை நடத்தவே போதிய அவகாசம் கொடுக்காமல் ஈராக்கைத் தாக்குவதிலேயே அமெரிக்கா அதிக அக்கறைகாட்டியதாகவும் கூறியிருந்தார்.
ஆனால், ஐ.நாவின் எதிர்ப்பையும் மீறி ஈராக் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல் நடத்தி வருகின்றன.இதையடுத்து பிலிக்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
இது போன்ற ஒரு நேரத்தில் அமெரிக்காவுக்கும் ஈராக்குக்கும் இடையே சிக்கிக் கொண்டு சீரழிய விரும்பவில்லைஎன பிலிக்சின் செய்தித் தொடர்பாளர் நிருபர்களிடம் தெரிவித்தார். சுவீடன் நாட்டைச் சேர்ந்த 74 வயதானபிலிக்ஸ் 2000ம் ஆண்டில் தலைமை ஆயுதக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
ஈராக் விஷயத்தில் நேர்மையாக செயல்பட்டதாக பல நாடுகளின் பாராட்டையும் பெற்றவர் இவர். வரும் ஜூன்மாதத்தில் அவர் தனது பதவியில் இருந்து விலகுவார்.
-->