கார் குண்டு வெடித்து 5 அமெரிக்க வீரர்கள் சாவு
நஜாப்:
ஈராக்கின் மத்தியப் பகுதியில் உள்ள நஜாப் நகரில் அமெரிக்கப் படைகள் மீது இன்று நடந்த தற்கொலைப் படைத்தாக்குதலில் 5 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க மெரைன் படைகளின் முதலாவது பிரிகேடைச் சேர்ந்த 3வது இன்பான்ட்ரி பிரிவினர் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நகரில் தேசிய நெடுஞ்சாலை எண் 9ல் அமெரிக்கப் படைகள் அமைத்திருந்தசோதனைச் சாவடிக்கு அருகே வந்த ஒரு டாக்சியை அந்தப் படையினர் தடுத்து நிறுத்தினர்.
அதை ஓட்டி வந்தவரிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டே காரை நெருங்கினர். அப்போது திடீரென அந்தக் கார்வெடித்துச் சிதறியது. இதில் 5 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். காரை ஓட்டி வந்த நபரும் உடல் சிதறிஉயிரிழந்தார். மேலும் பல அமெரிக்க வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தால் இனி கார்களை நினைத்த நேரத்தில் எல்லாம் நிறுத்தி சோதனையிடுவது அமெரிக்கப்படைகளுக்கு மிகவும் சிரமமான செயலாக மாறியுள்ளது.
50 ஈராக்கிய வீரர்கள் பலி:
இதற்கிடையே இந்த நகரில் அமெரிக்கத் தரைப்படையினரை நோக்கி தாக்குதல் நடத்திய ஈராக்கியப் படையினர்மீது அமெரிக்க ஹெலிகாப்டர்கள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தின. இதில் 50 ஈராக்கிய வீரர்கள்கொல்லப்பட்டனர்.
இத் தாக்குதலுக்கு 30 அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. சுமார் 50க்கும் மேற்பட்டஏவுகணைகளும் வீசப்பட்டன.
ரசாயன ஆயுதங்கள் தயார்:
இந் நிலையில் தங்கள் படைகளைத் தாக்க ரசாயன ஆயுதங்களை ஈராக்கிய வீரர்களுக்கு அந் நாட்டு ராணுவத்தலைமை வழங்க ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
குறிப்பாக ரிபப்ளிகன் கார்ட்ஸ் படையின் மெதினா பிரிவினரிடம் ரசாயன ஆயுதங்களை அதிபர் சதாம் ஹூசேன்தந்துவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது, பாக்தாதை நெருங்கினால் இந்த ஆயுதங்களை ஈராக்கியப் படைகள்தங்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் என அமெரிக்கா கூறுகிறது.
-->












Click it and Unblock the Notifications