வைகோவுக்காக சிறை செல்லவும் தயார்: கருணாநிதி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொடா சட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என கருணாநிதி நேரடியாகவே கோரிக்கைவிடுத்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் விடுதலை கோரி மாநிலம்தழுவிய அனைத்துக் கட்சி உண்ணாவிரதம் இன்று காலை தொடங்கியது. சென்னையில் இந்த உண்ணாவிரதத்தைதொடங்கி வைத்த திமுக தலைவர் கருணாநிதி கூறியதாவது:

பொடா சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் அதைஆதரிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது.

இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அதைத் தடுப்போம் என துணைப் பிரதமர் அத்வானி சொன்னதைநம்பினோம். அதை நம்பி நாடாளுமன்றத்தில் இச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தோம். ஆனால், அந்தநம்பிக்கை இப்போது பொய்த்துவிட்டது.

பொடா சட்டத்தை பல மாநில அரசுகளும் தவறாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. இதை மத்திய அரசால்தடுக்கவும் முடியவிலலை. இதனால் உடனே பொடா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

பொடா சட்டம் கத்தி மாதிரி. அந்தக் கத்தி தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் தொடர்ந்து கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவருகின்றனர்.

எதிர்க் கட்சிகளை மிரட்ட பொடா சட்டத்தை ஜெயலலிதா பயன்படுத்தி வருகிறார். ஆனால், இந்த மிரட்டலுக்குஎல்லாம் பயந்துவிட மாட்டோம். என் தம்பி வைகோவுக்காக சிறை செல்லவும் நான் தயாராக இருக்கிறேன்.

வைகோ மற்றும் பழ.நெடுமாறனின் விடுதலைக்காக எங்களது போராட்டங்கள் தொடரும். அதற்கும் அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தருவார்கள் என்றார் கருணாநிதி.

பொடா சட்டத்தை தீவிரமாக எதிர்த்து வரும் கருணாநிதி அதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைவிடுத்திருப்பது இதுவே முதன்முறையாகும்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+