குவைத் மீது அதிகாலையில் ஈராக் ஏவுணை தாக்குதல்
குவைத்:
குவைத் நகரின் மீது இன்று அதிகாலை ஈராக் பயங்கர ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இதனால் அந்தநகரமே குலுங்கியது.
இந்திய நேரப்படி காலை 4.15 மணிக்கு இந்த ஏவுகணை குவைத் நகரில் வந்து விழுந்து வெடித்தது. குவைத்அரசரின் மாளிகையை அடுத்துள்ள செளக் சராக் என்ற வணிக வளாகத்தை அருகே உள்ள சிறிய துறைமுகத்தைஇந்த ஏவுகணை தாக்கியது. இதில் அந்த துறைமுகமும், சிறிய அரங்கமும், வணிக வளாகமும் சேதமடைந்தன.
குவைத்தில் அது நள்ளிரவு நேரம் என்பதால் அந்த வணிக வளாகத்தில் யாரும் இல்லை. இதனால் உயிரிழப்புஏதும் நடைபெறவில்லை. இந்த ஏவுகணை வந்து விழுந்து வெடித்தபோது பெரும் சத்தம் எழுந்தது.
இந்த ஏவுகணை அல் போ வளைகுடாவில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது. இந்த வளைகுடா பகுதி தங்களதுகட்டுப்பாட்டில் உள்ளதாக அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள் கூறி வரும் நிலையில் அங்கிருந்தே ஈராக்ஏவுகணையைச் செலுத்தியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது..
மேலும் இந்த ஏவுகணை குவைத்துக்குள் நுழைந்ததையே அமெரிக்க ரேடார்கள் கண்டறியவில்லை.இதனால்ஏவுகணைத் தாக்குதல் நடப்பதை முன் கூட்டியே எச்சரிக்கும் அபாய ஒலி சைரன்கள் செயல்படவில்லை. திடீரெனஏவுகணை வந்து விழுந்து வெடித்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
போர் ஆரம்பித்த பின்னர் குவைத் மீது நடக்கும் 15வது ஏவுகணைத் தாக்குதல் இது. இந்த ஏவுகணைகப்பல்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதாகும். மிகக் குறைந்த உயரத்தில் பறக்கும் திறனுடையது என்பதால்அந்த ஏவுகணையை ரேடார்கள் கண்டறியவில்லை.
-->