அமெரிக்கா- பிரிட்டிஷ் இழப்புகள்: 51 சாவுகள், 22 பேரை காணவில்லை, 7 பேர் சிறை பிடிப்பு
நசிரியா:
ஈராக்கின் தென் மத்திய நகரான நசிரியாவில் ஈராக்கிப் படைகளிடம் சிக்கி அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள்சின்னாபின்னாவாகி வருகின்றன. இந்த நகரில் இதுவரை 14 பிரிட்டிஷ் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் 4 பேரைக் காணவில்லை.
அவர்களை ஈராக்கிய வீரர்கள் சிறை பிடித்திருக்கலாம் அல்லது கொன்றிருக்கலாம் என்று தெரிகிறது. ஈராக்கியப்படைகள் தாக்கியதில் பிரிட்டிஷ் படைகளைச் சேர்ந்த 12 பேர் முதலில் இந்த நகரில் 12 பேர் இறந்தனர். 5 பேர்சிறை பிடிக்கப்பட்டனர்.
பின்னர் மேலும் இரு வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு உதவியாக அமெரிக்க மெரைன்படைகள் வந்திறங்கின. ஆனால், இரு நாட்டுப் படைகளையும் ஈராக்கியப் படைகள் மிக ஆவேசமாக தாக்கிவருகின்றனர்.
இதனால் மேலும் பல அமெரிக்க, பிரிட்டிஷ் வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இன்று நசிரியாவின் புற நகர்ப்பகுதியில் சில உருக்குலைந்த உடல்கள் கிடந்தன. அவை அமெரிக்கப் படைகளின் உடல்கள் என்று தெரியவந்தன.இதையடுத்து அந்த உடல்களை அமெரிக்க- பிரிட்டிஷ் கைப்பற்றி அங்கேயே புதைத்தனர்.
இந் நிலையில் இந்த நகரில் மேலும் 4 அமெரிக்க வீரர்களைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் தொடங்கியது முதல் இதுவரை 51 அமெரிக்க- பிரிட்டிஷ் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 22 பேரைக்காணவில்லை. 7 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர் என பென்டகன் இன்று அறிவித்துள்ளது.
-->