தமிழகத்தில் ஸ்டார் டிவி. சேனல்கள் "கட்"
சென்னை:
தமிழகத்தின்பெரும்பாலான பகுதிகளில் சாட்டிலைட் சானல்களை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும்சுமங்கலி கேபிள்விஷன் (எஸ்.சி.வி.) நிறுவனத்திற்கும் ஸ்டார் டிவி நிறுவனத்திற்கும் இடையேஏற்பட்டுள்ள பிரச்சினையால் தமிழகம்முழுவதிலும் ஸ்டார் டிவி சானல்கள் ஒளிபரப்புநிறுத்தப்பட்டுள்ளது.
சுமங்கலி கேபிள் விஷன் சன் டிவிக்கு சொந்தமானது. தமிழகம் முழுவதும் கேபிள் டிவிஆபரேட்டர்களுக்கு சுமங்கலி கேபிள் விஷன் தான் சாட்டிலைட் டிவி ஒளிபரப்புகளை வழங்கிவருகிறது.
ஸ்டார் டிவி சானல்கள் சமீபத்தில் பே சானல்களாக மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து ஒவ்வொருஇணைப்புக்கும் இவ்வளவு தர வேண்டும் என்று ஸ்டார் டிவி நிறுவனம் கட்டணம் நிர்ணயித்தது.
ஆனால் அதை ஏற்க சுமங்கலி கேபிள் விஷன் மற்றும் பிற கேபிள் டிவி நிறுவனங்கள்மறுத்துவிட்டன. இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு ஸ்டார் டிவி சேனல்கள் ஒளிபரப்புநிறுத்தப்பட்டது.
பின்னர் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், உடன்பாடு ஏற்பட்டு மீண்டும் ஸ்டார் டிவி சானல்கள்தெரிய ஆரம்பித்தன.
தற்போது மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது. சன் டிவியின் சுமங்கலி கேபிள் விஷனுக்கு தனதுசேனல் ஒளிபரப்பைத் தர ஸ்டார் மறுத்துள்ளது. இதுதொடர்பாக ஸ்டார் டிவி தலைமைச் செயல்அதிகாரி சமீர் நாயர் கூறுகையில்,
கடந்த மூன்று மாதங்களாக ஸ்டார் டிவி நிறுவனத்திற்குத் தர வேண்டிய தொகையை எஸ்.சி.வி.நிறுவனம் செலுத்தவில்லை. எனவே அந்த நிறுவனத்துக்கு எங்கள் சேவையை நிறுத்தியுள்ளோம்.மற்ற கேபிள் நிறுவனங்கள் மூலம் ஸ்டார் டிவி சானல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளனஎன்று கூறியுள்ளார்.
இதன் காரணமாக சென்னை நகரின் 60 சதவீதப் பகுதிகள், மதுரை, கோவை, திருச்சி ஆகியநகரங்களில் ஸ்டார் டிவி சானல்கள் தெரியவில்லை.
கட் செய்யப்பட்டுள்ள சானல்கள் விவரம்:
ஸ்டார் பிளஸ், ஸ்டார் நியூஸ், ஸ்டார் மூவீஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கோல்டு, ஸ்டார் வேர்ல்டு,ஸ்டார் விஜய், சேனல் வி, நேஷனல்ஜியாகிராபிக் ஆகியவை.
பே-சானல்களாக ஸ்டார் டிவி சானல்கள் மாறிய பிறகு கேபிள் டிவியின் மாதாந்திர வாடகைக்கட்டணத்தை கேபிள் டிவி உரிமையாளர்கள் கணிசமாக உயர்த்தினர்.
ரூ.50லிருந்து ரூ.100 வரை கட்டண உயர்வு இருந்தது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்புத்தெரிவித்தனர்.
ஆனால் தற்போது ஸ்டார் டிவி சானல்கள் சுத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில்கடும் கண்டனம் எழுந்துள்ளது. விரைவில் இந்தப் பிரச்சினை சரியாகாவிட்டால் நுகர்வோர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் பதிவாகலாம் என்று தெரிகிறது.
-->