ஈராக்குக்கு சிரியா ஆயுத சப்ளை: அமெரிக்கா எதிர்ப்பு
வாஷிங்டன்:
ஈராக்கியப் படைகளுக்கு சிரியா ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
ஈராக் மீதான தாக்குதலை சிரியா மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது. அந்த நாடு தொடர்ந்து ஈராக்கை ஆதரித்துவருகிறது.
ஐ.நாவின் தடை காரணமாக ஆயுதங்களை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது ஈராக். இதனால்அமெரிக்கப் படைகளை அந் நாட்டு ராணுவம் சந்திப்பது கடினம் என்பதால் ஈராக்குக்கு சிரியா ஆயுதங்களைத் தரஆரம்பித்துள்ளது.
போர் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே இந்த ஆயுத சப்ளை ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.இப்போதும் கூட இந்த ஆயுத சப்ளை தொடர்வதாகக் கூறப்படுகிறது.
இதை சமீபத்தில் தான் அமெரிக்க ராணுவ உளவுப் பிரிவுகள் கண்டுபிடித்துள்ளன. இதையடுத்து சிரியாவுக்குஅமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈராக்குக்கு ஆயுதங்கள் தருவதும் தங்களுக்கு எதிராக போர்தொடுப்பது ஒன்று தான் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறியுள்ளார்.
ஆனால், ஈராக்குக்கு ஆயுதம் எதையும் தரவில்லை என சிரியா மறுத்துள்ளது. அமெரிக்கா தனது தவறுகளைமறைக்கவே இது போன்ற குற்றச்சாட்டைக் கூறியுள்ளதாக சிரியா கூறியுள்ளது. அமெரிக்க வீரர்கள் ஈராக்கில்மண்ணைக் கவ்வ ஆரம்பித்துவிட்டதால் அதைத் திசை திருப்பவே இந்த பொய்ப் பிரச்சாரத்தில் அமெரிக்காஈடுபட்டுள்ளது என சிரியா கூறியுள்ளது.
டாங்குகளுக்கு எதிரான குண்டுகள், எலெக்ட்ரானிக் ஜாமிங் ஆயுதங்கள், இரவு நேரத்தில் தாக்க உதவும் கருவிகள்ஆகியவற்றை ஈராக்குக்கு சிரியா தந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
ஈரானுக்கு எச்சரிக்கை:
இந் நிலையில் ஈராக்குக்குள் ஈரானிய போராளிக் குழுக்களும் நுழைந்து வருவதாகவும் அதை ஈரான் உடனேதடுக்க வேண்டும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications