மதிப்புக் கூட்டு வரி: தமிழகத்திற்கு ரூ. 2400 கோடி நஷ்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மதிப்புக் கூட்டு வரி காரணமாக தமிழக அரசுக்கு ரூ. 2400கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று நிதியமைச்சர் பொன்னையன் கூறினார்.

சமீபத்தில் VAT (value added tax) என்ற மதிப்புக் கூட்டு வரியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படிபொருள்களை வியாபாரிகள் வாங்கும்போதே அதற்கான வரியையும் மாநில அரசுகள் அவர்களிடம்வசூலித்துவிடும். இதனால் வரி ஏய்ப்பு செய்வதில் இருந்து வியாபாரிகள் தடுக்கப்படுவர்.

ஆனால், இந்த வரி காரணமாக நாட்டில் உணவுப் பொருள்களில் ஆரம்பித்து அன்றாடம் பயன்படுத்தப்படும்அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது திமுக உறுப்பினர் பொன்முடிபேசுகையில், மதிப்பு கூட்டு வரி விதிப்பால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றார்.

அப்போது குறுக்கிட்ட பொன்னையன் உண்மையில் மத்திய அரசின் வலியுறுத்தல் காரணமாகவேமதிப்புக் கூட்டு வரி விதிப்பை தமிழகமும் அமல்படுத்தவுள்ளது. ஆனால் இதனால் மாநில அரசுக்குரூ. 2400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட உள்ளது.

இதைச் சரிக் கட்டச் சொல்லி மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளோம். அனைத்து மாநிலஅரசுகளும் மதிப்புக் கூட்டு வரி விதிப்பை அமல்படுத்தினால்தான் தமிழக அரசும் அதைக்கடைப்பிடிக்கும்.

ஆனால் யாரும் இந்த வரி விதிப்பை தவிர்க்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள்தான்மதிப்புக் கூட்டு வரியை அமல்படுத்ததுடிக்கிறோம் என்பது போல திமுக உறுப்பினர் பேசுவதுசரியல்ல.

உண்மையில் திமுக தலைவர் கருணாநிதிமுதல்வராக இருந்தபோது டெல்லியில் நடந்த கூட்டத்தில்மதிப்புக் கூட்டு வரி விதிப்பை அமல் செய்வதாக மத்திய அரசிடம் உறுதியளித்தார் என்றார்பொன்னையன்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+