பிரிட்டனில் முஸ்லீம்களைக் குறிவைத்து தாக்குதல்
லண்டன்:
ஈராக் போர் தொடங்கியதில் இருந்து பிரிட்டனில் உள்ள முஸ்லீம்கள் மற்றும் அவர்கள் நடத்தி வரும்வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
வடக்கு பிரிட்டனில் உள்ள ஒரு மசூதி மற்றும் ஈராக்கியர் ஒருவர் நடத்தி வரும் ஹோட்டல்ஆகியவை குண்டு வீசித் தாக்கப்பட்டன.
மேற்கு யார்க்ஷைரின் தேவ்ஸ்பரி நகரில் உள்ள மதீனா மசூதி பெட்ரோல் குண்டால்தாக்கப்பட்டுள்ளது. இதில் மசூதிக்குக் கடுமையான சேதம் ஏற்பட்டது. கடந்த 2001 இறுதியில் நடந்தஆப்கானிஸ்தான் போரின்போது இதே மசூதியில் வெட்டப்பட்ட பன்றிகளின் தலைகள்வீசப்பட்டன.
மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன் க்ளீவ்லாண்டின் ரெட்காரில் ஈராக்கியர்கள் நடத்தி வரும் பீட்சாஹோட்டலில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக ஒருவனைப் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
இதேபோல் வேறு சில மசூதிகள் மீதும், பாகிஸ்தானைச் சேர்ந்த பல டாக்சி டிரைவர்கள் மீதும் கூடதாக்குதல்கள் நடந்துள்ளன.
இதையடுத்து பிரிட்டனில் உள்ள சுமார் 350 மசூதிகளுக்குப் பாதுகாப்புகள்அதிகரிக்கப்பட்டுள்ளன.
-->












Click it and Unblock the Notifications