அமெரிக்க ஹெலிகாப்டர், விமானம் வீழ்த்தப்பட்டன?
பாக்தாத்:
அமெரிக்காவின் ஹேரியர் போர் விமானத்தையும் அப்பாச்சி ஹெலிகாப்டரையும் தங்கள் வீரர்கள்சுட்டு வீழ்த்தியுள்ளனர் என்று ஈராக் செய்தி அமைச்சர் முகமது சயீத் சகாப் கூறியுள்ளார்.
போர் தொடர்பாக நிருபர்களிடம் பேசிய சகாப்,
அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டர் ஒன்றை நாங்கள் வீழ்த்தியுள்ளோம். மேலும் ஹேரியர்ரக விமானத்தையும் சுட்டுத் தள்ளியுள்ளோம். அதன் இரண்டு பைலட்டுகளும் கொல்லப்பட்டுவிட்டனர்.
மேலும் அமெரிக்காவின் நான்கு டாங்கிகளை ஈராக் வீரர்கள் தகர்த்துள்ளனர். அவற்றிலிருந்தஅமெரிக்கர்களை எங்கள் வீரர்கள் பிடித்து வைத்துள்ளனர்.
அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொள்கின்றனர். பாஸ்ராவுக்கு அருகே கிராமங்களில் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை அழித்துவருகின்றனர். இந்தத் தாக்குதல்களில் மூன்று குழந்தைகள் கூட இறந்துள்னர்.
உம் காசிர் நகருக்கு உதவிப் பொருள்களைக் கொண்டு வந்த இரண்டு கப்பல்களை அவர்கள் வரவிடாமல் தடுத்துள்ளனர்.
மேலும் பஸ்ராவில் உணவுப் பொருள் விநியோகம் செய்யப்படுவதையும் அமெரிக்க, பிரிட்டிஷ்படையினர் தடுத்து வருகின்றனர்.
பணத்தாசை மட்டுமே பிடித்த அவர்களுக்கு மனிதர்கள் துன்பப்படுவது பற்றிக் கவலையே இல்லைபோலும் என்றார் சகாப்.
இதற்கிடையே விமானம், ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்ட செய்திகளை அமெரிக்கா மறுத்துள்ளது.தங்களுடைய விமானமோ, ஹெலிகாப்டரோ, பைலட்டுகளோ காணாமல் போனதாகத் தகவல்கள்இல்லை என்று அது கூறியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications