சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 8 புதிய நீதிபதிகள் நியமனம்
சென்னை:
நீதிபதி அசோக்குமார், நீதிபதி பானுமதி உள்ளிட்ட 8 புதிய நீதிபதிகள் சென்னைஉயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உயர் நீதிமன்றத்தில் 29 நீதிபதிகள் மட்டுமே இருக்கின்றனர். ஆனால் மொத்த நீதிபதிஇடங்களோ 42. எஞ்சிய இடங்கள் நிரப்பப்படாமலேயே இருந்து வந்தன.
இந்நிலையில் நீதிபதிகள் பதவிக்காக 11 நீதிபதிகள் கொண்ட பட்டியலை மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுப்பி வைத்தது. அவர்களில் எட்டு நீதிபதிகள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகளின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்துசென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது.
புதிய நீதிபதிகள் விவரம்:
நீதிபதி ஆர். பானுமதி, நீதிபதி எஸ். அசோக்குமார், நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன், நீதிபதி டி.வி.மாசிலாமணி, நீதிபதி எஸ். சர்தார் சக்காரியா ஹூசேன், நீதிபதி எம். தணிகாசலம், நீதிபதி ஏ.ஆர்.ராமலிங்கம் மற்றும் நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலு.
இவர்களில் நீதிபதி பானுமதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செக்ஸ் சாமியார் பிரேமானந்தசுவாமிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
நீதிபதி அசோக்குமாரோ கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதி கைதுசெய்யப்பட்டபோது அதிமுக அரசைக் கடுமையாக விமர்சித்தவர்.
எட்டு புதிய நீதிபதிகளும் அடுத்த ஓரிரு நாள்களில் பதவி ஏற்பார்கள். சென்னை உயர் நீதிமன்றதலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
-->