முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. மீது துப்பாக்கிச் சூடு
திண்டுக்கல்:
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. செல்லச்சாமி மீது அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கியால்சுட்டனர். இதில் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்சத்திரம் அருகே உள்ள அரசப்ப பிள்ளைப்பட்டி கிராமத்தில் ஊராட்சிஇடைத் தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைக்க அமைச்சர்விஸ்வநாதன் அங்கு வருவதாக இருந்தார்.
இதையொட்டி அதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக செல்லச்சாமி தன் நண்பர்பழனிவேல் என்பவரின் காரில் விரைந்து கொண்டிருந்தார்.
குழந்தை வேலப்பர் கோவில் ரயில்வே கேட் அருகே கார் மெதுவாக சென்றபோது ரயில்வே கேட்பகுதியில் மறைந்திருந்த ஒரு நபர் திடீரென்று செல்லச்சாமி கார் மீது துப்பாக்கியால் சராமாரியாகச்சுட்டார்.
இதில் ஒரு துப்பாக்கிக் குண்டு கண்ணாடியைத் துளைத்துக் கொண்டு பின் சீட்டில் அமர்ந்திருந்தசெல்லச்சாமியின் தோள்பட்டையைத் துளைத்தது. உடனடியாக செல்லச்சாமி ஒட்டன்சத்திரம்கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை சுட்டது யார் என்று தெரியவில்லை. முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம்நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவரை அவர்கள்தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications