For Daily Alerts
Just In
போரை எதிர்த்து இந்தோனேஷியாவில் மாபெரும் பேரணி
ஜகார்தா:
ஈராக் போரை எதிர்த்து இந்தோனேஷியாவில் பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது.
ஈராக்கில் அமெரிக்கா தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பாகவே உலகெங்கிலும் இந்தப் போரைஎதிர்த்து போராட்டங்கள், பேரணிகள் ஆகியவை நடைபெற்றன.
போர் தொடங்கிய பின்னர் இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு நாடுகளிலும்போர் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இந்தோனேஷியாவில் இன்று பிரம்மாண்டமானப் பேரணி நடைபெற்றது.
ஈராக் போரை எதிர்த்து இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்தாவில் இந்தப் பேரணி நடந்தது.பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.
இதுவரை நடந்த பேரணிகளிலேயே இது மிகவும் பெரியது என்று கூறப்படுகிறது.
-->
Comments
Story first published: Sunday, March 30, 2003, 5:30 [IST]