காட்பாடி அருகே மீண்டும் தடம் புரண்ட சரக்கு ரயில்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
காட்பாடி அருகே மீண்டும் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டது.
சில நாட்களுக்கு முன் காட்பாடி ரயில் நிலையம் அருகே ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டது.
இதனால் இரண்டு நாட்களுக்கு சென்னை-பெங்களூர் இடையே ரயில் போக்குவரத்துநடைபெறவில்லை. தற்போதுதான் ஓரளவு நிலைமை சீரடைந்திருந்தது.
இந்நிலையில் காட்பாடி அருகே மறுபடியும் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டது.தண்டையார்பேட்டையிலிருந்து பெங்களூர் சென்ற சரக்கு ரயில் காட்பாடி அருகே வந்தபோது ஒருபெட்டி தடம் புரண்டது.
அந்த பெட்டி மட்டும் அகற்றப்பட்டு ரயில் போக்குவரத்து உடனடியாக சீர் செய்யப்பட்டது.
-->












Click it and Unblock the Notifications