தமிழக புது டி.ஜி.பியாக ஐ.கே. கோவிந்த் நியமனம்: ராஜகோபாலன் ஓய்வு
சென்னை:
தமிழக டி.ஜி.பியான ராஜகோபாலன் இன்று ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து புதிய டி.ஜி.பியாக ஐ.கே.கோவிந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக டி.ஜி.பியாக இருந்த நெயில்வால் திடீரென்று மாற்றப்பட்டுஅவருக்குப் பதிலாக ராஜகோபாலன் அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ராஜகோபாலனின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. அவர் ஓய்வுபெறுவதைத் தொடர்ந்து புதிய டி.ஜி.பியாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.
மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளான அலெக்ஸாண்டர், குமாரசாமி அல்லது கோவிந்த் ஆகியோரில்யாராவது புதிய டி.ஜி.பியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நெயில்வாலேமீண்டும் நியமிக்கப்படலாம் என்றும் காவல் துறை வட்டாரத்தில் கூறப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தின் புதிய டி.ஜி.பியாக கோவிந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரைதமிழ்நாடு காவல் துறை வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக இருந்து வந்தார்.
1969ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற கோவிந்த், குடியரசுத் தலைவர் பதக்கம்உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இன்று பிற்பகல் அவர் தமிழகத்தின் புதிய டி.ஜி.பியாகப் பதவி ஏற்றுக் கொண்டார்.
-->












Click it and Unblock the Notifications