For Daily Alerts
Just In
அந்தமான் விமானத்தில் கோளாறு: பாதி வழியில் சென்னை திரும்பியது
சென்னை:
சென்னையிலிருந்து அந்தமானுக்குப் புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் என்ஜின் கோளாறுகாரணமாக பாதி வழியிலேயே மீண்டும் சென்னைக்குத் திரும்பிவிட்டது.
சென்னையிலிருந்து இன்று அதிகாலை 5.45 மணிக்கு 60 பயணிகளுடன் அந்தமானுக்கு"அல்லயன்ஸ் ஏர்லைன்ஸ்" விமானம் கிளம்பியது.
ஆனால் கிளம்பிச் சென்ற ஒரு மணி நேரத்தில் விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டது.இதையடுத்து விமானத்தை மீண்டும் சென்னைக்கே திருப்பிக் கொண்டு வர விமானி முடிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து காலை 7.45 மணிக்கு அந்த விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்தில்தரையிறங்கியது.
கோளாறு சரி செய்யப்பட்ட பின் அவ்விமானம் நாளை காலை அந்தமானுக்குக் கிளம்பிச் செல்லும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை அதன் பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ளநட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்படுவர்.
-->
Comments
Story first published: Monday, March 31, 2003, 5:30 [IST]