பிரம்மாண்ட குடிநீர் குழாயில் பிணமாக கிடந்த பெண் சிசு
சென்னை:
பிறந்து ஒரே நாளான பெண் சிசு பிரம்மாண்டமான குடிநீர் குழாய்க்குள் பிணமான நிலையில்கண்டெடுக்கப்பட்டது.
புது வீராணம் திட்டத்திற்காக பதிக்கப்படவுள்ள பிரம்மாண்டமான குடிநீர் குழாய்கள்திருவொற்றியூர் பகுதிகளில் சாலையோரம் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
எண்ணூ
இந்தப் பரிதாபத்தைப் பார்த்த அப்பகுதியினர் சிலர் குழந்தையின் பிணத்தை திருவொற்றியூர்போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் குழந்தையின் பிணத்தை அரசு ஸ்டான்லிமருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
கடலில் மூழ்கி 2 கேரள வாலிபர்கள் சாவு:
இதற்கிடையே சென்னை திருவான்மியூரில் கடலில் குளித்த 2 கேரள வாலிபர்கள் கடலில் மூழ்கிபலியானார்கள்.
கேரளாவைச் சேர்ந்த அப்துல் என்பவரின் மகன் சலீல். இவர் நுழைவுத் தேர்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்தார்.
திருவான்மியூர் அருகே உள்ள திருவள்ளுவர் நகரில் முகம்மது பாஹேஜ் என்பவரின் அறையில்தங்கியிருந்தார் சலீல். பாஹேஜின் தந்தை பாபு. இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
இந்நிலையில் சலீலும் பாஹேஜும் கடலில் குளிக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாகஇருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் சலீலின் உடல் மட்டும்மீட்கப்பட்டுள்ளது. பாஹேஜின் உடல் இதுவரை கிடைக்கவில்லை.
இது குறித்து கேரளாவில் உள்ள அவர்களுடைய குடும்பத்தினருக்குத் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications