ஜெயாவை கும்பிட்டு இலவச மின்சாரம் கேட்ட துரைமுருகன்
சென்னை:
"நானும் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் என்ற முறையில் கேட்கிறேன். தயவு செய்துவிவசாயிகளுக்கு மீண்டும் இலவச மின்சாரத்தைக் கொடுங்கள்" என்று முதல்வர் ஜெயலலிதாவைநோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டவாறு சட்டசபை திமுக தலைவர் துரைமுருகன் வேண்டுகோள்விடுத்தார்.
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது துரைமுருகன் பேசுகையில்,
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் கொண்டுவரப்படுவதற்கு முக்கியக் காரணமாக இருந்ததேதிமுகதான்.
இந்த இலவச மின்சாரத் திட்டத்தைத் தொடர்வதால் அதிமுகவுக்குப் பெருமைதான் கிடைக்கும்.ஆனால் இதை ரத்து செய்துள்ளதால் அதிமுக ஆட்சிக்கு கெட்ட பெயர்தான் கிடைத்துள்ளது.
நானும் சாதாரண ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன்தான். இலவச மின்சாரம் ரத்துசெய்யப்பட்டதால் ஒரு விவசாயி எவ்வளவு துன்பப்படுவான் என்பதை நான் நன்கு அறிவேன்.
எனவே (முதல்வர் ஜெயலலிதாவை நோக்கி தன் தலைக்கு மேலே கைகளை உயர்த்தியவாறு)உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து இலவச மின்சாரம் ரத்துசெய்யப்பட்டதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார் துரைமுருகன்.
-->












Click it and Unblock the Notifications