"தண்ணி"யில் தகராறு: நண்பரை குத்திக் கொன்றவருக்கு போலீஸ் வலை
மதுரை:
மதுக் கடையில் 2 நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார்.
மதுரை சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த கதிர்வேலுவும், கொடியும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள்அடிக்கடி மதுக் கடைக்குச் சென்று "குடிப்பது" வழக்கம்.
அதுபோலவே இன்று காலையிலும் இருவரும் சேர்ந்து மதுக் கடைக்குச் சென்று மது வாங்கிக்குடித்துள்ளனர்.
போதை தலைக்கு ஏறவே கதிர்வேலுவுக்கும் கொடிக்கும் இடையே திடீரென்று வாய்த் தகராறுஏற்பட்டது. அடுத்த சிறிது நேரத்திலேயே இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
அப்போது கடும் ஆத்திரமடைந்த கொடி தன்னிடமிருந்த கத்தியை எடுத்து கதிர்வேலைசராமாரியாகக் குத்தினார்.
இதில் பலத்த காயம் அடைந்த கதிர்வேல் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்துஇறந்தார். நண்பர் இறந்ததும் வெலவெலத்துப் போன கொடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொடியைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
-->