54 அமெரிக்க- பிரிட்டிஷ் வீரர்கள் சாவு: ஈராக்
பாக்தாத்:
கடந்த 48 மணி நேரத்தில் 54 அமெரிக்க- பிரிட்டிஷ் வீரர்களைக் கொன்று குவித்துள்ளதாக ஈராக் கூறியுள்ளது.இவர்களில் பெரும்பாலானவர்கள் பாஸ்ரா நகர் அருகே கொல்லப்பட்டதாக ஈராக்கிய டிவி தெரிவித்தது.
ஈராக்கிய டிவியில் பேசிய ராணுவ செய்தித் தொடர்பாளர், பாஸ்ராவில் பிரிட்டிஷ் படைகளை ஈராக்கியப் படைகள்சுற்றி வளைத்துத் தாக்கின. அதில் பிரிட்டிஷ் வீரர்கள் கொல்லப்பட்டனர். இத் தாக்குதலையடுத்து பிரிட்டிஷ்படைகளைக் காக்க வந்த அமெரிக்கப் படைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அமெரிக்க வீரர்கள்இறந்தனர்.
4 அமெரிக்க அபாச்சி ஹெலிகாப்டர்கள், 2 விமானியில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என்றார்.
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 36 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பென்டகன் ஒப்புக்கொண்டுள்ளது.
இதற்கிடையே பாக்தாத், பாபிலோன் உள்ளிட்ட இடங்களில் அமெரிக்க விமானங்கள் நடத்திய தாக்குதலில் சுமார்55 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதாக ஈராக்கிய தகவல்துறை அமைச்சர் சைத் அல் சகாப் இன்று பிற்பகலில்தெரிவித்தார்.
இன்று பாஸ்ரா அருகே அல்-ஜீபையர் என்ற இடத்தில் அமெரிக்க சப்ளை வாகன வரிசையை ஈராக்கியப் படைகள்தாக்கி திருப்பி விரட்டின. ஒரு அபாச்சி ஹெலிகாப்டரையும் ஈராக்கியப் படைகள் வீழ்த்தின என்றார். நஜாப்பில் 7அமெரிக்க டாங்கிகளை சதாம் பிதாயீன் போராளிக் குழு அழித்தது.
நசிரியாவை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கும் அமெரிக்கப் படைகளின் முயற்சி தொடர்ந்து முறியடிக்கப்பட்டுவருகிறது. இன்றும் அங்கு அமெரிக்கப் படைகள் தீவிர தாக்குதலை சந்தித்து வருகின்றனர் என்றார்.
இந் நிலையில் அமெரிக்காவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஐ.நா. சபைக்கு அரபு நாடுகள்கூட்டமைப்பும், பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
இதற்கிடையே நானோ, எனது குடும்பத்தினரோ நாட்டை விட்டு ஓடவில்லை. ஓடவும் மாட்டோம் எனவும் ஈராக்அதிபர் சதாம் ஹூசேன் அந் நாட்டு ரேடியோவில் தெரிவித்தார். அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக சிலஅமெரிக்கப் படைகளின் கமாண்டர்கள் கூறியிருந்தனர்.
-->