For Quick Alerts
For Daily Alerts
Just In
காஷ்மீர் பனிச் சரிவில் சிக்கி 6 ராணுவத்தினர் பலி
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் ஏற்பட்ட கடும் பனிச் சரிவில் சிக்கி 6 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள்உயிரிழந்தனர்.
வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா அருகே உள்ள நவ்காம் பகுதியில் கடந்த மார்ச் 29ம்தேதி பனிச்சரிவு ஏற்பட்டது.
இந்தப் பனிச் சரிவில் சிக்கி ஆறு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் அப்படியே சமாதியாகிவிட்டனர்.
சுமார் மூன்று நாட்களுக்குப் பின்னர் தற்போதுதான் அவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
பழங்கப்பா, பி.ஜே. பால், நோர்கில் ஷெர்ப்பா, நேகோ ஷெர்ப்பா மற்றும் வினோத் குமார் ஆகியஐந்து வீரர்களும் இறந்தவர்களில் அடக்கம். மற்றொருவரின் பெயர் விவரம் தெரியவில்லை.
Comments
Story first published: Tuesday, April 1, 2003, 5:30 [IST]