7 பெண்கள், குழந்தைகள் சுட்டுக் கொலை: அமெரிக்க ராணுவம் வெறிச் செயல்

Subscribe to Oneindia Tamil

நஜாப்:

பாக்தாதின் தென் மத்திய நகரான நஜாபில் 7 பெண்கள் மற்றும் குழந்தைகைள அமெரிக்க வீரர்கள் அநியாயமாகசுட்டுக் கொன்றனர்.

இந்த நகரின் மீது அமெரிக்கப் படைகள் பயங்கர தாக்குதல் நடத்தி வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள்கார்களிலும், வேன்களிலும், நடந்தும் ஊரை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நகரின் உள்ள ஈராக்கியப்படைகள் தீவிர தாக்குதல் நடத்துவதால் நகரின் வெளியே தான் அமெரிக்கப் படைகள் நிற்கின்றன.

நகரின் வெளியே பல இடங்களில் சோதனைச் சாவடிகளை அமெரிக்கப் படையினர் அமைத்துள்ளனர்.அமெரிக்கப் படைகளின் குண்டுவீச்சில் இருந்து தப்பிய 13 அப்பாவி மக்கள் ஒரு காரில் ஊரை விட்டு வெளியேவந்தனர்.

இந்தக் காரை அமெரிக்கப் படையினர் சோதனைச் சாவடி அருகே தடுத்து நிறுத்தினர். ஆனால், தங்களைதேவையில்லாமல் தொந்தரவு செய்வார்கள் என்று கருதிய அந்தக் காரின் டிரைவர் அதை நிறுத்தாமல் சென்றார்.

இதையடுத்து அந்தக் காரின் மீது அமெரிக்கப் படைகள் பல தரப்பில் இருந்தும் துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர்.இதில் அந்தக் கார் தூள் தூளானது. அதில் இருந்த 7 பெண்களும் குழந்தைகளும் துப்பாக்கிக் குண்டுகளுக்குஅநியாயமாகப் பலியாயினர்.

மேலும் 6 பேர் பலத்த காயமடைந்தனர். அமெரிக்காவின் 3வது இன்பாண்ட்ரி படைகள் நடத்திய தாக்குதல் இது.

இது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட தாக்குதல் என அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+