சூப்பர் கம்ப்யூட்டர் "பரம் பத்மா" நாட்டுக்கு அர்ப்பணம்
பெங்களூர்:
இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டரான "பரம் பத்மா" இன்று நாட்டுடைமை ஆக்கப்பட்டது.
மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான அருண் செளரிபெங்களூரில் இந்த சூப்பர் கம்ப்யூட்டரை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பெங்களூரில் உள்ள சி-டாக் சூப்பர் கம்ப்யூட்டர் மையத்தில் "பரம் பத்மா" தற்போதுவைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற அதிகத் திறன் வாய்ந்த, படு வேகமாகச் செயல்படக் கூடிய சூப்பர் கம்ப்யூட்டர்களைஅமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல் மற்றும் சீனா போன்ற நாடுகள்தான் வைத்துள்ளன.
இந்த நான்கு நாடுகளுக்கு அடுத்தபடியாக சூப்பர் கம்ப்யூட்டரை வைத்துள்ள பெருமையை இந்தியாபெற்றுள்ளது.
இந்த சூப்பர் கம்ப்யூட்டர் சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட "பரம் 10000"சூப்பர் கம்ப்யூட்டரைக் காட்டிலும் 10 மடங்கு சக்தி வாய்ந்தது.
10 டெராபைட்டுகளுக்கும் மேலான தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கும் தன்மை வாய்ந்தது"பரம் பத்மா" என்பது குறிப்பிடத்தக்கது.