தமிழக அரசின் வசம் வந்தது வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

வேலூரில் உள்ள புகழ்பெற்ற சுவாமி ஜலகண்டேஸ்வரர் திருக்கோவிலை இந்து அறநிலையத் துறைதன் வசம் எடுத்துக் கொண்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஜலகண்டேஸ்வரர் கோவிலை இதுவரை தர்மஸ்தான டிரஸ்ட் என்றஅமைப்பு பராமரித்து வந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை இந்தக் கோவில் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. கோவிலின் தக்காராக சுந்தரராஜ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான மூன்று உண்டியல்கள் தற்போது ஜலகண்டேஸ்வரர்கோவிலில் வைக்கப்பட்டுள்ளன.

திருப்பதிக்கு சிறப்பு பஸ்:

சென்னையிலிருந்து திருப்பதிக்கு புதிய இரவு நேர சிறப்பு பஸ் வசதியை ஆந்திரப் பிரதேச சுற்றுலாத்துறை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பஸ் தினமும் இரவு 10 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி திருப்பதிக்குச் செல்கிறது. இதில்செல்பவர்கள் சுவாமி வெங்கடாஜலபதியின் தரிசனத்திற்காக வரிசையில் காத்துக் கொண்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை.

சுவாமி தரிசனம் முடிந்த பின்னர் உடனடியாகக் கிளம்பி மாலை 3.30 மணிக்கே பக்தர்கள்சென்னைக்குத் திரும்பி விடலாம். நாளை முதல் இந்த வசதி அமலுக்கு வருகிறது.

ஏற்கனவே தினமும் காலையிலும் மாலையிலும் என ஒரு நாளைக்கு இருமுறை இதுபோன்றபஸ்களை ஆந்திர சுற்றுலாத் துறை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+