மதிப்புக் கூட்டு வரி: பிசுபிசுக்கிறது கடையடைப்பு
சென்னை:
மதிப்பு கூட்டு வரி விதிப்பைக் கண்டித்து தமிழகத்தில் வணிகர் சங்கங்கள் மேற்கொண்டுள்ளகடையடைப்பு பிசுபிசுத்து வருகிறது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மதிப்புக் கூட்டு வரி விதிப்பைக் கண்டித்துநேற்று முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று காலை பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தாலும் ஹோட்டல்கள்,டீக்கடைகள், மருந்துக் கடைகள், பேக்கரிகள் போன்றவை திறந்திருந்தன.
மாலையில் நிலைமை மேலும் மாறியது. பொதுமக்களின் வற்புறுத்தல் காரணமாக பல பகுதிகளில்மளிகைக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
மேலும் வணிகர் சங்கங்களின் பேரவை அல்லாத பிற சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவுதெரிவிக்கவில்லை. இந்த சங்கங்களின் செல்வாக்கு அதிகம் உள்ள மதுரை, திருநெல்வேலி,தூத்துக்குடி போன்ற பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன.
சென்னையில் சில குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் கடையடைப்பு நடந்தது. இன்றுபிற்பகலுக்கு மேல் கடைகளைத் திறக்கப் போவதாகப் பல வியாபாரிகள் கூறி வருகின்றனர்.
எனவே கடையடைப்பு காரணமாக பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் மதிப்புக் கூட்டு வரி விதிப்பு இன்று முதல் இந்தியாமுழுவதிலும் அமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-->