புது வீராணம் திட்டம் கண்டிப்பாக நிறைவேறும்: ஜெ. சவால்
சென்னை:
சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் புது வீராணம் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.இதனால் வீராணம் பாசன பகுதிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் பேசுகையில்,
புது வீராணம் திட்டத்தை நிறைவேற்றுதில் பல அடிப்படை சிக்கல்கள் உள்ளன. காவிரி நீர்தொடர்ந்து கிடைத்தால்தான் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து அதன் பிறகு அதை சென்னைக்குகொண்டுவர முடியும்.
ஆனால் காவிரியிலிருந்து சரியான முறையில் தண்ணீர் வராத நிலையில் வீராணம் ஏரியிலிருந்துஎப்படி சென்னைக்கு தண்ணீர் கொண்டுவர முடியும் என்றார் எஸ்.ஆர்.பி.
அப்போது குறுக்கிட்டு ஜெயலலிதா பதிலளிக்கையில்,
காவிரியில் நீர் இல்லாதபோது வடகிழக்குப் பருவ மழையைத் தேக்கி வைத்து அதன் மூலம்சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர முடியும். மேலும் சென்னைக்கு தண்ணீர் எடுப்பதால் வீராணம்பாசனப் பகுதி நிலங்கள் பாதிக்கப்படாது.
அதற்கேற்ப வீராணம் ஏரியை விரிவு படுத்தும் திட்டம் அரசிடம் உள்ளது. அதை நிறைவேற்றியபிறகே புது வீராணம் திட்டம் நிறைவேற்றப்படும். எனவே யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல்சென்னைக்கு குடிநீர் கொண்டுவர முடியும். எனவே இந்தத் திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றமுடியும் என்றார் ஜெயலலிதா.
-->












Click it and Unblock the Notifications