வீரப்பன் கும்பலுடன் அதிரடிப்படையினர் கடும் துப்பாக்கிச் சண்டை

Subscribe to Oneindia Tamil

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் காட்டுப் பகுதியில் வீரப்பனுக்கு உணவு எடுத்துச் சென்றவர்களுக்கும்அதிரடிப்படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அவர்களில் சிலரைபிடித்துள்ளதாகவும் அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

சந்தனக் கடத்தல் வீரப்பன் தற்போது மேட்டுப்பாளையம் காட்டுக்குள் பதுங்கியிருப்பதாகக்கூறப்படுகிறது. இதையடுத்து மேட்டுப்பாளையம், பகாசுரன் மலை, நெல்லித் துறை, உள்ளியூர்ஆகிய காட்டுப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான அதிரடிப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல்வேட்டை நடந்து வருகிறது.

இந்நிலையில் உள்ளியூர் வனப் பகுதியில் நேற்று வீரப்பன் கும்பலுக்கு சிலர் உணவு எடுத்துச்செல்வதைப் பார்த்த அதிரடிப்படையினர் அவர்களைத் தடுக்க முயன்றனர்.

ஆனால் அந்தக் கும்பல் திடீரென்று அதிரடிப்படையினரை நோக்கித் துப்பாக்கியால் சுடஆரம்பித்தது. உடனே அதிரடிப்படையினரும் பதிலுக்கு அவர்களை நோக்கித் துப்பாக்கியால்சுட்டனர்.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் சிலர்பிடிபட்டனர். மேலும் பலர் தப்பி ஓடிவிட்டனர்.

பிடிபட்டவர்களிடம் அதிரடிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம்கிடைத்த தகவலின்படி வீரப்பன் மேட்டுப்பாளையம் வனப் பகுதியில்தான் பதுங்கியுள்ளதாகத்தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து உள்ளியூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில்அதிரடிப்படையினர் தங்களுடைய தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+