அவினாசி அருகே வேன்-லாரி மோதி எரிந்தன: ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
அவினாசி:
அவினாசி அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் அவை இரண்டும் தீப்பிடித்துஎரிந்தன. இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் சிக்கி உயிரிழந்தார்.
நேற்று இரவு ஈரோட்டில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.அவினாசி அருகே வந்தபோது அந்த லாரி மீது எதிர்த் திசையில் வந்த ஒரு வேன் பயங்கரமாகமோதியது.
மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் பயங்கரமாகத் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் சிக்கிசாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் லாரியிலும் வேனிலும் வந்து கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் படுகாயம்அடைந்தனர்.
விபத்து குறித்து அவினாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications