For Daily Alerts
Just In
பிலிப்பைன்ஸில் குண்டு வெடிப்பு: 15 பேர் பலி
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தாவோ நகரில் நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர்கொல்லப்பட்டனர். மேலும் 34 பேர் காயமடைந்தனர்.
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள தாவோ நகர விமான நிலையத்தில் கடந்த மார்ச் 4ம் தேதிதான்பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு தாவோ நகரின் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் ஒருவெடிகுண்டு பயங்கரமாக வெடித்தது.
இந்தக் குண்டு வெடிப்பில் 4 குழந்தைகள் உள்பட 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 34பேர் வரை படுகாயம் அடைந்தனர்.
குண்டு வைத்தவர்கள் யார் என்று இதுவரை தெரியவில்லை. பிலிப்பைன்ஸ் அதிபர் குளோரியாமாக்காபகல் இந்தச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-->
Story first published: Thursday, April 3, 2003, 5:30 [IST]