பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தை பிடிக்க முயற்சி
பாக்தாத்:
பாக்தாதின் சர்வதேச விமான நிலையத்தைக் கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்கப் படைகள் ஈடுபட்டுள்ளன.முன்னதாக பாக்தாதின் வெளிப் பகுதியில் உள்ள ஒரு ராணுவ விமான தளத்தை இந்தப் படைகள் கைப்பற்றின.
ஈராக்கியப் படைகள் ரசாயன ஆயுதத் தாக்குதல்களை நடத்தலாம் என்பதால் முகமூடிகளுடன் இந்தப் படைகள்நகர்ந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான டாங்கிகள், கவச வாகனங்கள், ஆயுத, எரிபொருள் லாரிகளுடன் இந்தப்படைகள் முன்னேறி வருகின்றன.
இந்தப் படைகளின் முன்பாக கண்ணிவெடிகளை அகற்றும் படைப் பிரிவுகள் செல்கின்றன. அமெரிக்கப்படைகளுக்குத் துணையாக ஹெலிகாப்டர்கள் விண்ணில் வட்டமடித்து வருகின்றன.
இந்தப் படைகளுடன் இருக்கும் பீரங்கிகள் ஈராக்கியப் படைகள் மீது 25 கி.மீ. தொலைவில் இருந்தவண்ணம்குண்டுகளை வீசி வருகின்றன. முன்னதாக பாக்தாதில் இருந்து 30வது கி.மீ. தொலைவில் இந்தப் படைகளைத்தடுக்க முயன்ற ஈராக்கியப் படைகள் மீது கடும் தாக்குதல் நடந்தது.
இதில் 500க்கும் மேற்பட்ட ஈராக்கிய வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. பாக்தாத் சர்வதேச விமானநிலையம் நாளைக்குள் பிடிக்கப்பட்டுவிடும் என அமெரிக்கப் படைகள் தெரிவித்துள்ளன.
-->