கண்ணி வெடியில் சிக்கி பி.பி.சி. காமிரா மேன் பலி
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
ஈராக்கில் நிலக் கண்ணி வெடியில் சிக்கி பி.பி.சி. காமிராமேன் உடல் சிதறி உயிரிழந்தார்.
இந்த ஊரில் காரில் இருந்து இறங்கிய இவர் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில்தெரியாமல் கால் வைத்து விட்டார். இதையடுத்து கண்ணிவெடி வெடித்துச் சிதறியது. இதில் அவர்அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியானார்.
அவருடன் இருந்த பி.பி.சியின் நிருபரான ஸ்டூவர்ட் ஹூக்ஸ் என்பவரது காலில் படுகாயம்ஏற்பட்டது. அவர் அருகில் உள்ள அமெரிக்க வீரர்களின் மருத்துவ முகாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வேறு இரண்டு பி.பி.சி. நிருபர்கள் காயம் அடையாமல் தப்பிவிட்டனர்.
பலியான கோல்ஸ்டன் கடந்த 3 ஆண்டுகளாக பி.பி.சியில் பணியாற்றி வருகிறார். இது தவிரஅசோசியேட்டட் பிரஸ், டைம்ஸ் மேகசீன் ஆகிய நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications