மதுரை: சேற்றில் மூழ்கி வாலிபர் பலி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை வைகை ஆற்றுப் படுகையில் தோண்டப்பட்டிருந்த கிணற்றில் தவறி விழுந்த 17 வயதுவாலிபர் அதிலிருந்த சேற்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை செல்லூர் பகுதியில் வைகை ஆற்றின் அருகே தண்ணீருக்காக சாலைப் பணியாளர்கள் கிணறுதோண்டி வைத்துள்ளனர். இந்தக் கிணற்றில் சேறும் சகதியும் கலந்த தண்ணீர்தான் உள்ளது.

இந்நிலையில் இன்று காலை அவ்வழியாக 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களில்ஒருவர் மட்டும் அந்தக் கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.

கிணற்றுக்குள் விழுந்த அவர் சேற்றுக்குள் சிக்கித் தவித்தார். மேலே இருந்த அவர் நண்பர் போட்டஅலறலில் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கிணற்றுக்குள் விழுந்த வாலிபரை மீட்க முயற்சித்தனர்.

ஆனால் அவர் சேற்றுக்குள் மூழ்கி விட்டார். இதற்குள் தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் சென்றது.அவர்கள் விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்க முயற்சித்தனர். ஆனால் அவருடைய பிணத்தைமட்டுமே மீட்க முடிந்தது.

செல்லூர் மற்றும் ஆரப்பாளையம் பகுதிகளில் இதுபோன்ற ஏராளமான பள்ளங்கள்தோண்டப்பட்டுள்ளதாகப் புகார் கூறிய அப்பகுதி மக்கள், இவற்றில் மூழ்கி இதுவரை 5 பேர்உயிரிழந்துள்ளதாகவும் கூறினர்.

இதுபோன்ற கிணறுகளில் தேவைப்படும் தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனடியாக அதை மூடிவிடஉத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+