"ஐ-பிளெக்ஸ்" சாப்ட்வேர் நிறுவன தலைவருக்கு ஜாமீன்
லண்டன்:
லண்டனில் கைது செய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த "ஐ-பிளெக்ஸ்" சாப்ட்வேர் நிறுவனத்தின்தலைவரான செந்தில் குமாருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் செந்தில் குமார் லண்டனில் திடீரென கைது செய்யப்பட்டார். ஹாலந்தில் உள்ள"ஐ-பிளெக்ஸ்" நிறுவனத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர்கள் முறையான விசாவைத்திருக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஹாலந்து அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் லண்டன் போலீசார் செந்தில்குமாரைக் கைது செய்தனர். மேலும் ஹாலந்தில் உள்ள "ஐ-பிளெக்ஸ்" நிறுவனத்தைச் சேர்ந்தசாப்ட்வேர் என்ஜினியர்களும் நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
சமீப காலமாக வெளிநாடுகளில் இந்திய சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு எதிரான கொடுமைகள்அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் செந்தில் குமாரும் கைது செய்யப்பட்டது இந்திய சாப்ட்வேர்நிபுணர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செந்தில் குமாரை விடுவிப்பதற்காக லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் பெரும் முயற்சிகளைஎடுத்துக் கொண்டது.
அதன் விளைவாக நேற்று செந்தில் குமார் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் தன்பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் அவர் லண்டனை விட்டு வெளியேறக் கூடாது என்றும் உத்தரவிட்ட நீதிமன்றம், இதுதொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.