ஈராக்கை எந்த நாடும் கொள்ளையடிக்க கூடாது: ஜெர்மனி
Subscribe to Oneindia Tamil
பெர்லின்:
ஈராக்கில் போர் முடிந்த பிறகு அந் நாட்டு எண்ணெய் வளத்தை எந்த நாடும் கொள்ளை அடிக்கக் கூடாது. அந்நாட்டின் சொத்துக்கள் அந் நாட்டு மக்களிடமே இருக்க வேண்டும் என ஜெர்மன் அதிபர் கெரார்ட் ஸ்ரேடர்கூறியுள்ளார்.
அந் நாட்டை யாரும் துண்டாடக் கூடாது. பங்கு போடக் கூடாது என்றார்.
இதற்கிடையே துருக்கி ராணுவம் ஈராக்கின் வட எல்லையில் தனது படைகளைக் குவித்துள்ளது. ஈராக்கின் வடபகுதியில் உள்ள குர்து இனத்தினரின் பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர துருக்கி விரும்புகிறது.
இதை அமெரிக்கா எதிர்க்கிறது. ஆனாலும் துருக்கி வான் வெளி வழியாகத் தான் வட பகுதியில் தனது ராணுவம்செயல்பட முடியும் என்பதால் துருக்கியை அமெரிக்காவால் அடக்க முடியவில்லை. ஈராக்கின் வட பகுதிஎண்ணெய் வயல்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர துருக்கி திட்டமிட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications