For Daily Alerts
Just In
தமிழகத்தில் அம்மை நோயே கிடையாது: ஜெ. அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் "சிக்கன் பாக்ஸ்" எனப்படும் அம்மை நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாகமுதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடந்து வருகிறது. தமிழக சுகாதாரத் துறைக்குமானியம் ஒதுக்குவது தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றது.
அப்போது, அம்மை நோய்க்கு தடுப்பு ஊசி போடப்படும் திட்டம் எந்த நிலையில் உள்ளது என்றுஒரு உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெயலலிதா பதிலளிக்கையில்,
தமிழகத்தில் அம்மை நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. மாநிலத்தில் தற்போது யாருக்குமேஅம்மை நோய் ஏற்பட்டிருக்கவில்லை.
எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்குத் தடுப்பு ஊசி போடத் தேவையில்லைஎன்றார் ஜெயலலிதா.
-->
Comments
Story first published: Thursday, April 3, 2003, 5:30 [IST]