For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உயர் நீதிமன்றத்தில் 8 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 8 நீதிபதிகள் இன்று காலை பதவிஏற்றுக் கொண்டனர்.

உயர் நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 42 இடங்களில் 13 இடங்கள் கடந்த சில மாதங்களாககாலியாகவே கிடந்தன.

இந்நிலையில் கடந்த வாரம் 8 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து இன்று காலைஇந்தப் புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

நீதிபதி பானுமதி, நீதிபதி அசோக் குமார், நீதிபதி கிருஷ்ணன், நீதிபதி மாசிலாமணி, நீதிபதிராமலிங்கம், நீதிபதி சர்தார் சக்காரியா ஹூசேன், நீதிபதி தணிகாசலம் மற்றும் நீதிபதி சிங்காரவேலுஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி பதவிப் பிரமாணம்செய்து வைத்தார்.

பதவியேற்புக்குப் பின்னர் புதிய நீதிபதிகள் அனைவரும் நன்றி தெரிவித்துப் பேசினர். அப்போதுநீதிபதி பானுமதி பேசுகையில், "என் தந்தை விபத்தில் இறந்தபோது நஷ்ட ஈடு கேட்டு என் தாய்வழக்கு தொடர்ந்தார். ஆனால் பலமுறை அலைந்து திரிந்ததுதான் மிச்சம். பலன் கிடைக்கவேஇல்லை. அவ்வழக்கு நடந்த சேலம் நீதிமன்றத்திலேயே பின்னர் நானும் நீதிபதியாகநியமிக்கப்பட்டேன்" என்றார்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த எளிய பதவியேற்பு விழாவில் நீதிபதிகள்,வழக்கறிஞர்கள் மற்றும் புதிதாகப் பதவியேற்ற நீதிபதிகளின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதிய நீதிபதிகள் பதவியேற்றுள்ளதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின்எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 5 இடங்கள் காலியாகவே உள்ளன.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X