மதுரை விமான நிலையத்தை விரிவாக்க தமிழக அரசு கோரிக்கை
சென்னை:
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று மத்தியஅரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம் மதுரை. ஆனால், மதுரை விமான நிலைய ரன் வேயில்விமானங்களின் நடமாட்டத்தைவிட மாடுகளின் நடமாட்டம் தான் அதிகமாக உள்ளது. மிக முக்கியசுற்றுவாத் தலமான மதுரைக்கு சென்னையில் இருந்து மட்டுமே ஒரே ஒரு விமானம்இயக்கப்படுகிறது.
மற்ற நகர்களுக்கு இணைப்பு இல்லை. மதுரை விமான நிலையத்தை விரிவாக்க வேண்டும், விமானநிலையத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டுவருகிறது.
இந் நிலையில் தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது. அப்போதுபோக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசுகையில்,
மதுரை விமான நிலையத்தின் ஓடு தளம் (ரன் வே) தற்போது 6,000 அடியாகத்தான் உள்ளது.
இந்த 6,000 அடி நீளமுள்ள "ரன் வே" 7,500 அடியாக அதிகரிக்கப்பட வேண்டும். இதற்கானநிலங்களைப் பெறும் பணிகளைத் தற்போது தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 7,500அடி ரன் வே இருந்தால் தான் சர்வதேச விமானங்கள் அங்கு தரையிறங்க முடியும்.
ஏற்கனவே இதற்காக சுமார் 4 ஹெக்டேர் நிலத்தை இந்திய விமானப் போக்குவரத்துத் துறையிடம்அளித்துள்ளோம்.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்என்றார் விஸ்வநாதன்.
-->