முயல் வேட்டைக்குச் சென்ற 6 பேர் விபத்தில் சிக்கி சாவு
நாமக்கல்:
நாமக்கல் அருகே முயல் வேட்டைக்குச் சென்ற வேனும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் விராலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் உகாதி பண்டிகையையொட்டிமுயல் வேட்டைக்குச் சென்றனர். இதற்காக 2 நாய்களையும் அவர்கள் ஒரு வேனில் அழைத்துச்சென்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சமையல் கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு எதிரே வந்தடேங்கர் லாரியும் இந்த வேனும் வலையப்பட்டி அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்தப் பயங்கர விபத்தில் வேன் சுக்கு நூறாக நொறுங்கியது. வேனில் இருந்த 6 பேர் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். வேட்டைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 2 நாய்களும்பரிதாபமாக இறந்தன.
இவ்விபத்தில் காயமடைந்த மற்ற ஆறு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications