For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரவாதி ராஜாராமன் மர்ம சாவு: சி.பி.ஐ. விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ் தீவிரவாதி ராஜாராமன் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 8 வழக்கறிஞர்கள்மனு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த வாரம் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலிருந்து சென்னை மத்திய சிறைக்கு ராஜாராமன்கொண்டு செல்லப்பட்டபோது அவரைத் தப்புவிக்க மற்ற தீவிரவாதிகள் முயற்சித்தனர்.

அப்போது போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில்ராஜாராமனும், சரவணன் என்ற மற்றொரு தீவிரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆனால் போலீசார்தான் வேண்டுமென்றே ராஜாராமனைச் சுட்டுக் கொன்று விட்டு தப்ப முயற்சி,துப்பாக்கிச் சண்டை என்று நாடகம் ஆடுவதாக சில மனித உரிமை ஆர்வலர்களும்,வழக்கறிஞர்களும் போலீசார் மீது குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் 8 வழக்கறிஞர்கள் இன்று காலை மனு தாக்கல் செய்தனர். அம்மனுவில்,

ராஜாராமன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் போலீசார் கூறும் காரணங்கள் கொஞ்சம் கூடநம்பும்படியாக இல்லை.

சம்பவம் நடந்த கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த மக்களிடம் நாங்கள் விசாரித்ததில் துப்பாக்கிச்சண்டை எதுவும் அங்கு அப்போது நடக்கவே இல்லை என்று தெரிவித்தனர்.

எனவே இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விசாரணையில்தமிழகப் போலீசார் தலையிடக் கூடாது என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜாராமன் கொல்லப்பட்ட சம்பவத்தில் வழக்கறிஞர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம்எங்களால் பதில் அளித்துக் கொண்டிருக்க முடியாது என்று 2 நாட்களுக்கு முன்புதான் சென்னைமாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கூறியிருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X