வீரர்களுக்கு செய்தி அனுப்பிய சதாம்
பாக்தாத்:
ஈராக் அதிபர் சதாம் ஹூசேன் மீண்டும் அந் நாட்டு டிவியில் தோன்றினார். இன்று ரேடியோ மூலமும் தனதுவீரர்களுக்கு செய்தியை அனுப்பினார்.
துணைப் பிரதமர் தாகா யாசின் ரமதான், துணைப் பிரதமர் தாரிக் அஜீஸ், ராணுவ அமைச்சர் அபுதுல் தவ்வாப் அல்முல்லா, வர்த்தக அமைச்சர் மெஹ்தி சாலேக், எண்ணெய்துறை அமைச்சர் அமீர், தனது மகன்கள் உதய், குவாசிஆகியோருடன் அவர் சிரித்தவாரே விவாதம் நடத்தும் காட்சிகளை ஈராக்கிய டிவி காட்டியது.
ராணுவ உடையில் இருந்த சதாம் ஈராக்கிய வரைபடங்களை வைத்துக் கொண்டு அவர்களுடன் விவாதிக்கும்காட்சியும் காட்டப்பட்டது.
இக் கூட்டத்தில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதாக ஈராக்கிய டிவி காட்டியது.
மேலும் டிவியில் சதாமின் அறிக்கையும் வாசிக்கப்பட்டது. அதில் சதாம் கூறியிருப்பதாவது:
நாட்டுக்குள் ஊடுருவும் கும்பல்களுடன் கூட்டு சேர வேண்டாம் என குர்து இனத் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவர்களுடன் சேர்ந்து கொண்டு நாட்டைக் காட்டிக் கொடுத்தால் அதற்காக பின் நாளில் மிகவும்வருத்தப்படுவீர்கள். மிகக் கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள் என்று கூறியுள்ளார்.
ரேடியோவில் இன்று...
இதற்கிடையே இன்று ரேடியோ மூலம் அவர் வெளிட்டுள்ள செய்தியில், அல் குட் நகரில் அமெரிக்கப்படைகளுக்கு பெருத்த சேதத்தை விளைவித்த ஈராக்கியப் படையின் வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களுடையே போர்த் திறன் என் மனதை நிறைத்துவிட்டது. தைரியமான வீரர்களே உங்களுக்கு இறைவன்துணை நிற்பான். உங்களுடன் சேர்ந்து எதிரிகளுக்கு பாடம் புகட்டிய பாத் கட்சியின் தொண்டர்கள், ஜெருசலேம்வீரர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் சதாம்.
-->