மும்பை பல்கலையில் தமிழ் ஆராய்ச்சிக்கு உதவும் சுயேச்சை எம்.எல்.ஏ.
சென்னை:
மும்பை பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சிக்காகத் தனித் துறையை ஏற்படுத்த வேண்டும் என்றுராதாபுரம் எம்.எல்.ஏவான அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளார்.
சுயேச்சை எம்.எல்.ஏவான அப்பாவு இது தொடர்பாக மகாராஷ்டிர முதல்வருக்கு எழுதியுள்ளகடிதத்தில்,
மும்பை பல்கலைக்கழகத்தில் தமிழுக்கும் தமிழ் ஆராய்ச்சிக்கும் என தனித் துறையை அமைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக நான் ரூ.20 லட்சம் வரையிலான தொகையை நானே கொடுக்கத் தயாராக உள்ளேன்.
தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில உள்ள தமிழ் மாணவ, மாணவிகளின் நலனுக்காக 7ஆம் வகுப்புவரை தமிழ் மீடியத்தில் படிக்கும் வசதியை அம்மாநில அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதற்குநன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் இந்த வசதியை 12ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும். ஏனென்றால் ஆங்கில மீடியத்தில்படிக்கும் வாய்ப்பைப் பெறாத தமிழ் மாணவ, மாணவிகள் 7ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக்கொண்டு விடுகிறார்கள்.
எனவே இது தொடர்பாகவும் மகாராஷ்டிர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறேன் என்று தன் கடிதத்தில் கூறியுள்ளார் அப்பாவு.
உடல் மண்ணுக்கு, உயிர்த் தமிழுக்கு என வசனம் பேசுவோர் அப்பாவுவைப் பார்த்து வெட்கப்படுவதும்திருந்துவதும் நல்லது
-->