கனமழையால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் சேதம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் பெய்த பலத்த மழையில் மீனாட்சி அம்மன் கோவில் ராஜகோபுரத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது.

மதுரை நகரில் வியாழக்கிழமை இரவு கனத்த மழை பெய்தது. இந்த திடீர் கன மழையால் மதுரை மக்கள் மகிழ்ச்சிவெள்ளத்தில் மிதந்தனர். கடும் வெயிலில் வாடி, வதங்கி வந்த மக்களுக்கு இந்த மழை பெரும் வரப் பிரசாதமாகஅமைந்தது.

இந்த மழையில் மீனாட்சி அம்மன் கோவிலின் ராஜகோபுரம் லேசாக சேதமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

அதில் உள்ள சில சிலைகள் உடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. விரைவில் இவை சரி செய்யப்பட்டுவிடும் என்றுகோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த மழை காரணமாக பல இடங்களில் மின் வயர்கள் அறுந்து விழுந்தன. ஒரு இடத்தில் இந்த மின்சார வயரைமிதித்துவிட்ட 60 வயது மூதாட்டி மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.

சேலம், திண்டுக்கல்லில் மழை:

அதே போல சேலம், திண்டுக்கல் மாவட்டகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. சேலம் அருகே மின்னல் தாக்கி ஒருபெண் இறந்தார். ஒரு குழந்தை காயமடைந்தது.

ஊட்டியில் கனமழை:

நீலகிரி மாவட்டத்திலும் வழக்கத்திற்கு மாறாக 2 மாதங்களுக்கு முன்னதாகவே கன மழை பெய்யஆரம்பித்துவிட்டது. இதனால் அந்த மாவட்டத்தின் மலைப் பகுதிகள் பூத்துக் குலுங்கி வருகின்றன. இதனால் அங்குசுற்றுலா சீசனும் முன்னதாகவே ஆரம்பித்துவிடும் என்று தெரிகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+