3 தமிழறிஞர்களின் படைப்புகள் தேசியமயம்
சென்னை:
தமிழ் இலக்கியவாதிகள் 3 பேரின் நூல்கள் தேசியமயமாக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
வெங்கடேச நாட்டார், நா.சுப்ரமணியம் என்ற க.நா.சு, நா.பிச்சமூர்த்தி ஆகியோரின் நூல்களேநாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. தமிழ் வளர்ச்சி மற்றும் கலாச்சாரத் துறைக்கான அமைச்சர் பொறுப்பை வகிக்கும்அமைச்சர் செம்மலை சட்டசபையில் இதனைத் தெரிவித்தார்.
இதன் மூலம் இவர்களது படைப்புகளை அரசு தன் உரிமையாக்ககிக் கொண்டு இவர்களின் சட்டப்பூர்வவாரிசுகளுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கும்.
மேலும் சென்னையில் ஏழுகிணறு பகுதியில் உள்ள அருட்பெருஞ்ஜோதி வடலூர் வள்ளலாரின் வீடுதேசியமயமாக்கப்பட்டு நினைவகமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதுதவிர மதுரை திருமலைநாயக்கர் மஹால், ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனை, தஞ்சாவூர் நாயக்கர்தர்பார் ஹால், காஞ்சிபுரம் திருலோகிநாத ஜீனஸ்வாமி கோவில், தரங்கம்பாடி டச்சுக் கோட்டை, உதயகிரிகோட்டை ஆகியவை ரூ.2.40 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
-->