For Quick Alerts
For Daily Alerts
Just In
திருச்சியில் 4 இலங்கைத் தமிழர்கள் கைது
திருச்சி:
திருச்சியில் சட்ட விரோதமாக ஊடுருவிய 4 இலங்கை வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து க்யூ பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சியில் பல லாட்ஜ்களில் சோதனை நடந்தது.
அப்போது பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த 4 பேர் மீது சந்தேகமடைந்த போலீசார்அவர்களைக் கைது செய்தனர். அவர்களது பெயர் விஜயக்குமார், வசந்தராஜா, தினேஷ், சிவக்குமார் என்றுதெரியவந்தது. இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும், முறையான அனுமதி இல்லாமல் இந்த 4 பேரும்இந்தியா வந்ததும் தெரியவந்துள்ளது.
அவர்களிடமிருந்து எட்டு பாஸ்போர்ட்டுகள், ரூ.20,000 இந்தியப் பணம், ரூ.10,000 இலங்கைப் பணம், 3செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
Comments
Story first published: Saturday, April 5, 2003, 5:30 [IST]