மெழுகுவர்த்திகளை ஏந்தி ராணி மேரி கல்லூரி மாணவிகள், ஆசிரியையகள் போராட்டம்
சென்னை:
தங்கள் கல்லூரியை இடித்து விட்டு புதிய சட்டசபை கட்டடம் கட்ட முயற்சிக்கும் அரசின்நடவடிக்கையை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வரும் ராணி மேரி கல்லூரி மாணவிகளும்ஆசிரியைகளும் விடிய விடிய கல்லூரிக்குள் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு நாட்களாகக் கல்லூரிக்கு வெளியே கடற்கரை சாலையில் அமர்ந்துநூற்றுக்கணக்கான மாணவிகளும் ஆசிரியைகளும் போராட்டம் நடத்தினர். ஆனால் போலீசாரின்அடாவடித்தனம் காரணமாக அவர்கள் கல்லூரிக்குள்ளேயே உள்ளிருப்புப் போராட்டம் நடத்தமுடிவு செய்தனர்.
இதையடுத்து கல்லூரி வளாகத்திற்குள்ளேயே அமர்ந்து அவர்கள் தங்கள் போராட்டத்தைத்தொடர்ந்தனர்.
நேற்று இரவிலும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். கைகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்துக் கொண்டு மாணவிகளும் ஆசிரியைகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நள்ளிரவுக்கு மேலாகியும் அவர்கள் வீடுகளுக்கும், விடுதிக்கும் திரும்பாமல் உள்ளிருப்புப்போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியது.
-->