மதுரை சித்திரை திருவிழா தொடங்கியது
மதுரை:
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மதுரை மாநகரின் முக்கியமான விழாக்களில் முதன்மையானது சித்திரைத் திருவிழாவாகும்.
மீனாட்சி திருக் கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்குவது என முக்கியமானநிகழ்வுகளைக் கொண்டிருப்பதால் சித்திரைத் திருவிழாவை மதுரை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ளமக்கள் வெகு சிறப்புடன் கொண்டாடுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சிஅம்மன் கோவில் கம்பத்தாடி மண்டபத்திற்கு மீனாட்சி அம்மனும் சோமசுந்தரப் பெருமானும்கொண்டுவரப்பட்டனர்.
அங்கு கொடியேற்ற விழா நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டுகடவுள்களை வணங்கினர்.
பின்னர் மாலையில் கற்பக விருட்ச சிம்ம வாகனத்தில் அம்மனும், பெருமாளும் மாசி வீதிகளில்ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
-->












Click it and Unblock the Notifications