ஊட்டியில் 2 மகள்களுடன் கேரள தம்பதி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

உதகமண்டலம்:

கேரளாவைச் சேர்ந்த கணவன்-மனைவி தங்களுடைய 2 குழந்தைகளுடன் ஊட்டியில் தற்கொலைசெய்து கொண்டனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் தன் மனைவி (வயது32), 12மற்றும் 17 வயது கொண்ட இரண்டு மகள்கள் ஆகியோருடன் கடந்த 1ம் தேதி ஊட்டி வந்தார். அங்குதனியார் விடுதி ஒன்றில் நால்வரும் தங்கினர்.

பின்னர் கடந்த 4ம் தேதிக்குப் பின்னர் அவர்கள் எங்கும் காணப்படவில்லை. அவர்கள் தங்கியிருந்தஅறைக் கதவும் திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த விடுதி உரிமையாளர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். விரைந்துவந்து அந்த அறையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கு கிருஷ்ணகுமார் தூக்குப் போட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவருடைய மனைவி மற்றும்இரண்டு மகள்களும் மற்றொரு அறையில் பிணமாகக் கிடந்தனர். அவர்களுக்கு கிருஷ்ணகுமார்விஷயம் கொடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு கடிதத்தைப் போலீசார் கைப்பற்றினர். கடன் தொல்லைகாரணமாகத்தான் கிருஷ்ணகுமார் தன் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனதெரிய வந்துள்ளது.

இது குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+